ஒரு காலை வேளை
மேகத்தின் நடுவே சூரியன் மறைந்த நிலை
அதோ மக்கள் அலை
இடம் உழவர் சந்தை.
இலை முதல் காய்வரை பசுமையாய்
நானும் அந்த அலையில் ஒருவனாய்
கையில் பிடித்திருந்தேன் புளிச்சக்கீரை
அருகே வந்தால் ஒரு கிழவி
ரவிக்கை இல்லாத துறவி
கீரை விலை என்ன என வினவி
நான்கு ரூபாய் என்றேன்
ஒன்றா இரண்டா என்றால் கட்டு
ஒன்றுதான் என்று சொல்லி நகைத்தேன்
வாய்ப்பிளந்தால் சத்த மிட்டு
விலைவாசியின் ஏற்றம்
அவள் சுருங்கிய முகத் தோற்றம்
மறைந்தால் தளர் நடையுடன் ....அலையில்!
No comments:
Post a Comment